உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்ட மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், தனது உடல் எடையை குறைப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹெர்போ கேர் மருத்துவமனையில் தங்கி பாக்யஸ்ரீ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலைக் குறைவால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் கொடுக்காத மருத்துவமனை நிர்வாகம், பாக்யஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் சடலத்தை தூக்கி போட்டு விட்டு சென்றுள்ளனர்.
பின்னர், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாக்யஸ்ரீயின் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.