
சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழரசு கட்சியை முதலமைச்சர் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றார். எனவேதான் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொண்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.